அத்தியாயம் 12
அத்தியாயம் 12
அன்றும் எல்லா வேலைகளையும்
முடித்துக்கொண்டு அலுவலகம் கிளம்பிய நேரம் சரியாய் வருண் கூப்பிட்டான். அவசர
அவசரமாய் உண்ட படி மஹி எடுத்து பேசினாள்.
“டேய் எரும கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ண மாட்டியா
சரியா அலுவலகம் போகும் போது தான் கால் பண்ணுவியா... லேட்டாச்சுன்னா
உங்க அண்ணா வேற கடுப்படிப்பாரு..
அவருகிட்ட வாங்கி
கட்டறதுக்குன்னே எனக்கு இப்போ கால் பண்ணு” என்று உண்ட படியே
பேசியவளை முறைத்து பார்த்தான் வருண் விடியோ காலில்.
“என்ன முறைப்பு இல்ல என்ன முறைப்புன்னு கேக்குறேன்” என்று
அவனை அதட்டிய படியே உண்டவளை
“கொஞ்ச மாச்சும் கொளுந்தன்னு ஒரு பயம் இருக்கா உனக்கு.. இரு
கிழவிக்கிட்ட உன்னை போட்டு குடுக்குறேன்” என்று மிரட்டினான்.
“ஹ நீ என்ன வேணாலும் சொல்லிக்க ஆனா பாட்டி எப்பவும்
என் பக்கம் தான்..” பீற்றிக்கொள்ள
“அதனால தான் உனக்கு ரொம்ப கொழுப்பு வச்சு போச்சு...”
“அதனால ஒன்னும் இல்ல என்ற ஹஸ்பெண்டு எனக்கு குக் பண்ணி
போடுறதுனால தான்” என்று மத்திய உணவை இருவருக்கும் கட்டிக்கொண்டு இருந்தவனை
பார்த்து சொன்னவளை கண்டு குறும்புடன் கண்ணடித்தான் ரிஷி..
“ம்ம்ம்.. போதும் உங்க ரொமான்ஸ்.. இங்க
திரும்பு” என்று மஹியை அவனின் பக்கம் திருப்ப
“அதானே உனக்கு பொறுக்காதே.. உங்க
அண்ணனே எப்பயாவது தான் ரொமான்ஸ் பண்றாரு” என்று அலுத்துக்கொண்டவளை
“அடிப்பாவி புளுகி.. ‘பாருடா
வருண் பத்து கோடிக்கு டெண்டர் எடுக்க சொன்னா பத்து ரூபாய்க்கு டெண்டர் கொட்டேஷன் எழுதி
கையெழுத்து வாங்குறான்னு ரிஷி அண்ணாவ பத்தி பார்த்தி மாமா கம்ப்ளைன்ட் பண்றாரு.. ஆனா
நீ இப்படி புளுகி கிட்டு இருக்க”
என்று மேலும் அவளை வம்புக்கு இழுக்க
“ம்ம் ஆமா வேலை மெனக்கெட்டு பார்த்திபன் அண்ணா வந்து
உன் கிட்ட சொன்னாராக்கும்..
போடா பொய் சொல்லி..”
“எது நான் பொய் சொல்லியா... நீ
தான்..” என்று இருவரும் போனிலே சண்டை போட பார்த்துக்கொண்டிருந்த
ரிஷி திருந்தாத கேஸ் என்று தன் வேளைகளில் கவனமாய் இருந்தான்.
இதுங்க சண்டை போடுதுன்னு
நினைச்சி தலைய உள்ளே விட்டா சேதாரம் இவனுக்கு தான் ஆகும்.. எதுக்கு
இந்த வேண்டாத வேலை நமக்குன்னு அவன் அவர்களின் பக்கம் தலையை கூட திருப்ப மாட்டான்...
அவர்களே சண்டை போட்டு
ஓய்ந்து போன பின்பே இவன் பேச ஆரம்பிப்பான்.
அவர்கள் இருவரும்
பேசிக்கொண்டு இருக்க மஹியின் கை பையில் அவளுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்க வேண்டியதை
எடுத்து வைத்தான்.
“பாட்டி பேசுனாங்களாடா”
“ம்ம்ம் பேசுனாங்க.. உன்
கிட்ட பேசுனாங்களா மஹி.”
“இப்போ தான்டா பேசுனாங்க.. சரி
அங்க சையிட் அடுச்சுக்கிட்டு இருக்காம ஒழுங்கா படிடா” அவனை
வார பல்லை கடித்தவன்
“உங்களுக்கும் அதே தான் ஆபிசரம்மா.. ஒழுங்கா போய் பையிலை பாருங்க.. வெட்டியா
சீட்டை தேய்ச்சுக்கிட்டு என் அண்ணனை சையிட் அடிச்சுட்டு வராதீங்க...” அவனும்
அவளை வார
“டேய்”
“என்ன”
“நீ நேர்ல வா உன்னை கொலை பண்றேன்”
“அத பண்ண நானும் இந்தியா வர போறேன்.. நீ
எதுக்கும் ஒரு போலிஸ் கம்ப்ளயின்ட் குடுத்து வை” என்றான்
கொலைவெறியோடு.
“ஹ உன்னை சமாளிக்க இந்த மஹியே போதும்டா” கெத்தாய்
மொழிந்தவளை கண்டு
“ம்ம் பார்ப்போம் அதையும்” என்றவன்
மேலும் பேச மஹியும் பேச ஒரு கட்டத்தில்
“ப்ச் நேரமாச்சு கிளம்பலையா” என்று
ரிஷியின் சத்தம் கேட்க்க இருவரும் சத்தமில்லாமல் “சாயங்காலம்
பார்க்கலாம்” என்று பாய் சொல்லிக்கொண்டு புன்னகையோடு வைத்துவிட்டனர்.
அவளோடு காரில் பயணித்த
படியே “அதென்னடி என்னை வச்சுக்கிட்டே நீங்க ரெண்டு பேரும்
என்னை வம்பிளுத்துக்கிட்டு இருக்கீங்க”
என்று போலியாய் முறைக்க
“ம்ம் அதெல்லாம் அண்ணி கொழுந்து சமந்தப்பட்டது.. அதை
எல்லாம் கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது”
“ம்ம் அப்படியா..” என்று
அவளை ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தான். மனதில் மஹியை நினைத்தது
அவ்வளவு பெருமை. வருண் தாத்தா பாட்டி மூவரிடமும் அவ்வள்ளவு பாசம் வைத்து
இருந்தாள் அவள்.
“என்ன காலைலயே லுக்கு பலமா இருக்கு” என்றவள் “ரிஷி
பூ வேணும்” என்று உரிமையாய்.
“நீ கேப்பன்னு தெரியும்டி” என்றவன்
வழியில் இருந்த பூ கடையில் பூவை வாங்கி தந்தான் ஆசையாய். அவனை
விட ஆசையாய் அதை தலையில் வைத்துக்கொண்டாள்.
“ம்ம் இப்போ சொல்லுங்க என்னவோ கேட்டீங்களே..”
“இல்ல கொஞ்சம் கூட பயம் இல்லாம என்னை பக்கத்தில் வச்சுக்கிட்டே
ரெண்டு பேரும் என்னை கலாய்க்குறீங்களே என்ன விஷயம்னு கேட்டேன்”
“எங்களுக்கு உங்களை விட்ட யாரு இருக்கா ரிஷி..” உருகி
சொன்னவள் பின் “சோ அதான் ரெண்டு பேரும் உங்களை வச்சு டைம் பாஸ் பண்ணிக்கிட்டு
இருக்கோம்” என்றாள் நக்கலாய்.
“உனக்கு வாய் ரொம்ப கூடி போச்சு வீட்டுக்கு வா குறைக்குறேன்” என்றான்
அவளது உதடுகளை பார்த்த படி..
“சாருக்கு பதில் பேச தெரியலன்னா இப்படி தான் செயல்ல
காட்டுறதா நோ இது அநியாயம்”
என்றாள் கண்சிமிட்டி.
“என்னை பொறுத்த வரை இது தான் நியாயம்” என்று
கண்ணடித்தவன் அவளை ரசனையுடன் பார்வை இட்டான்.
அவர்களது வாழ்க்கை
மிக அழகானதா நகர்ந்தது... ஒவ்வொரு கணமும் அவளை ரசனையுடன் ரசித்து வாழ பழக்கினான்.
ரிஷி மஹியை காதலிப்பதை
பற்றி அவனது குடும்பத்துக்கு தெரிய படுத்த தாத்தா பாட்டி வருண் மூவரும் அவளிடம் பேசி
அவளை தங்களுக்குள் ஒருத்தியாக கொண்டு வந்து அதை அவளை உணரவும் வைத்தார்கள்.
மூவரும் காலை இரவு
என இரு நேரமும் அவளிடம் பேசிவிடுவார்கள். இவளும் அவர்களது
காலுக்காக போனையே பார்த்துக்கொண்டு இருப்பாள். ரிஷி
கூட கிண்டல் பண்ணுவான்.
அவள் ஒரு உதட்டு
சுழிப்போடு “போயா”
என்று கடந்து விடுவாள்.
“என்னடி புதுசு புதுசா பேசுற..” சுளித்த
அவளது உதடுகளையே பார்த்த படி கேட்பான்.
“ம்ம் பாட்டிட்ட பேசி பேசி பழக்க மாகிடுச்சு” என்று
தோளை குழுக்கியவளை கண்டு இவன் காண்டாவான்.
“மரியாதையா பேசி பழகுடி” அதட்டல்
போட்டால்
“சாரி பாஸ் அதெல்லாம் வர மாட்டிக்கிது” என்று
அவனை வெறுப்பேற்றி பார்ப்பாள்.
“மஹி”
“ப்ச் ரிஷி... அந்த மாடல் அழகா
இருக்கு.. எனக்கு பிடிச்சி இருக்கு ப்ளீஸ்” என்று
அவள் அவனது கை வளைவுக்குள் இருந்து கெஞ்சினால் அவனால் எப்படி மறுக்க முடியும்.
“சரி போய் தொல” என்று
சம்மதம் கொடுக்கத்தான் அவனால் முடிந்தது.
அன்று மாலை இருவரும்
கீழ் வீட்டு செம்பா பாட்டி வீட்டுக்கு சென்றார்கள்.
“வாங்க தம்பி வாம்மா..” இருவரையும்
வரவேற்று பாட்டியை பார்க்க சொல்ல அவரது அறைக்கு சென்று அவரை பார்த்தார்கள்.
“வாடி தங்கம்...” என்று
மஹியின் முகத்தை வருடிவிட்டு ரிஷியின் பக்கம் திரும்பி “உங்களை
தான் தம்பி என்னால பார்க்கவே முடியல..
நானும் இந்த மூணு மாசமா மஹி கிட்ட கேட்டா உங்களுக்கு
அதிக வேலை இருக்கு அதனால வீடு வர பதினோரு மணி ஆகிடுதுன்னு சொல்லிக்கிட்டு இருப்பா...” என்று
சொல்ல ரிஷி அவளை பார்த்தான்.
இருவரும் ஒரு வீட்டில்
இருக்கும் போது அவனை பார்க்க முடியவில்லை என்றாலும் அது ஆண் என்று புரிந்து இருந்ததால்
மஹி அவர்களை சமாளிக்க முடியாமல் கணவன் என்று சொல்லி வைத்திருந்தாள். இல்லை
என்றால் அவளை தவறாக நினைக்க வைக்குமே...
அந்த பாட்டி வேறு நன்றாக பேசுவதால் அவரின் அபிமானத்துக்காக
பொய் சொன்னாள்.
அதை புரிந்துக்கொண்டவன்
மென்மையான சிரிப்புடன் “இப்பவும் வேலை தான் பாட்டி.. ஆனா
மஹி தான் வந்த ஆகணும் என் பெஸ்டிக்கு கல்யாணம்னு ஒரே அடம்” அதான்
அலுவலகத்துல பர்மிசன் கேட்டுட்டு வந்தேன்” என்று அழகாக அவளை
தூக்கி நிறுத்தி நாங்கள் உண்மையான கணவன் மனைவி என்று காட்டினான்.
தாத்தாவும் வந்து
அவர்களை பார்க்க சுற்றத்தோடு நட்பு முறைகளும் சிலர் வந்திருக்க அவர்களோடு சேர்ந்து
மஹி வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
மாமாவின் முகத்தில்
சற்று வருத்தமும் படபடப்பும் தெரிய என்ன வேண்று மஹி விசாரித்தாள்.
“மண்டபம் சமந்தமா கொஞ்சம் பிரச்சனையா இருக்கு மஹி” என்றார்
வருத்தமாக..
“என்ன ஆண்டி சொல்றீங்க முன்னாடியே அட்வான்ஸ் குடுத்து
பதிவு செஞ்சாச்சு தானே..”
“அதெல்லாம் பண்ணியாச்சு மா... ஆனா
அந்த மண்டப மேனேஜர் தான் இப்போ ஏதேதோ சொல்லிக்கிட்டு இருக்காரு.. அதான்
மாமாவை ஒரு எட்டு போய் பார்த்துட்டு வர சொல்லி சொல்லலாம்னு இருக்கேன்”
“ஓ அப்படியா ஆண்டி மாமா மட்டும் தனியா போக வேண்டாம்
இருங்க அவரையும் போக சொல்றேன்”
என்றவள் வாசலில் தோரணம் கட்டிக்கிட்டு இருந்த ரிஷியிடம்
விஷயத்தை சொன்னாள்.
அவனது முகத்தில்
சிந்தனை படிய லேசாய் கோவமும் தெரிந்தது.
“சரி நீ போய் ஆண்டிக்கு உதவியா இரு நான் பார்த்துக்குறேன்” என்று
மாமாவோடு கிளம்பி போக, அவனோடு கீழே வந்தவள் அவனது கையை பிடித்துக்கொண்டு “கை
வச்சுடாதீங்க ரிஷி.. பக்குவமா பேசுங்க” என்று
தயக்கத்துடன் கூறியவளை பார்த்து
“அதை நான் பார்த்துக்குறேன் நீ வொரி பண்ணிக்காத” என்று
கிளம்பிவிட்டான்.
அவன் காரை கிளப்பிய
விதமே அவன் கோவமாக இருக்கிறான் என்று புரிய கடவுளே ரிஷி கோவ பட கூடாது என்று வேண்டிக்கொண்டாள். ஏனெனில்
அவனது கோவத்தின் முழு பரிமாணத்தையும் அறிந்தவளாயிற்றே..
அவளும்
அவர்களோடு கூட மாட உதவி செய்துக்கொண்டே நேரத்தை அவ்வப்போது பார்த்துக்கொண்டு இருந்தாள். ஒரு
மணி நேரம் ஆகியும் இன்னும் ரிஷி வந்த பாட்டை காணோம்.
நாளை காலை அவசரத்தில்
கோலம் போட முடியாது என்பதால் இப்போதே கோலம் போட, அது
போட்டு முடிந்த சமயம் தான் ரிஷி வந்து சேர்ந்தான்.
மாமாவின் முகம் மலர்ந்து
இருந்ததை கண்டே போன காரியம் சரியாய் முடிந்தது என்று புரிந்துக்கொண்டாள்.
ஆனால் ரிஷியோ மஹியின்
முகத்தை காணாமல் உள்ளே செல்ல சென்றவனின் மீது சந்தேகம் வந்தது. இடம்
பொருள் அறிந்து இப்போது அவனிடம் எதையும் கேட்க முடியாது என்று உணர்ந்து அவளும் எதையும்
காட்டிக்கொள்ளவில்லை.
ரிஷியின் கண்களுக்கு
தெரியாமல் ரெங்கன் மாமாவிடம் என்னவென்று விசாரித்தாள்.
“என்ன அங்கிள் ஆச்சு..”
“அதுமா அந்த மேனேஜர் ஓனருக்கு தெரியாம நிகழ்ச்சி நடக்கும்
ஒரு நாளுக்கு முன்னாடி உரியவங்களை கூப்பிட்டு மேற்க்கொண்டு நிகழ்ச்சி நடக்கணும்னா மேலும்
பத்தாயிரம் குடுக்கணும்னு எல்லாரையும் மிரட்டி பணம் பார்த்துக்கிட்டு இருக்கான்.. அதே
போல என்னையும் கூப்பிட்டு பணம் கேட்டான். எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம சரி குடுத்துடலாம்னு
தான் போனேன். ஆனா ரிஷி தான் தடுத்துட்டாறு..
அந்த மண்டபத்தின்
ஓனரை உன் வீட்டு காரருக்கு தெரியுமாம்.
அதனால முதலாளியோட நன்மதிப்புக்கு துரோகம் பண்றன்னு
செவிலிலே விட்டார் மா...” என்று சொல்ல
“நினைத்தேன்” என்று முனகினாள்.
கூடவே அவனோட வேலையையும்
பறித்து விட்டதையும் சொல்ல
“சுத்தம்” என்று
எண்ணியவளுக்கு எரிச்சல் தான் வந்தது.
“என்னம்மா சொன்ன” என்று
புரியாமல் கேட்பவரை கண்டு
“ஈஈஈ” என்று
இளித்து காண்பித்து “ஒண்ணுமில்லை” என்றாள்.
“அதானே புருசனோட வீர செயலை பார்த்து மகிழாத மனைவிமார்கள்
இருப்பார்களா என்ன” என்று நேரம் காலம் தெரியாமல் அவர் வேறு கிண்டல் பண்ண
“உள்ளம் கொதிப்பதை வெளியே காட்டாமல் சிரித்து தொலைத்ததற்கு
இந்த பட்டமா?” நொந்து போனாள் அவள்.
அதன் பிறகு அவளுக்கு
வேலையே ஓடவில்லை.. கண்கள் முழுவதும் அவன் மீதே இருக்க அவனோ அவளை பார்க்கவேயில்லை..
இப்படியே கண்ணாமூச்சி
ஆடியவன் அவர்களிடம் கிளம்புவதாக அறிவிக்க அவளும் அவனோடு கிளம்பினாள்.
வீட்டிற்குள் நுழைந்த
உடன் ஏதுமறியாதவன் போல மஹியை அணைக்க வர அவனை ஒரு பார்வை பார்த்தவள் விலகி சென்றாள்.
“மஹி”
அழுத்தத்துடன் அவளை அழைத்தான்.
“சொல்லுங்க” என்றாள் படுக்கையை
தட்டி போட்ட படி..
“என்னை பாருடி”
“எதுக்காக பார்க்கணும்”
“இவ்வளவு நாள் எதுக்காக பார்த்தியோ அதுக்காக பாரு”
“இன்னைக்கு அது அவசிய படலன்னு தோணுது” என்றவளது
பேச்சு அவனுக்கு சினத்தை கொடுக்க வேகமாய் அவளது கரத்தை பற்றி இழுத்து தன்னை பார்க்க
செய்தான்.
“விடிங்க ரிஷி”
“முடியாதுடி” அவனது பிடி இறுகியது.
“ப்ச் விடுங்க எனக்கு தூக்கம் வருது”
“நான் இல்லாம நீ தூங்கிடுவியா” அவளை
ஆழம் பார்த்தான்.
“நான் அப்படி சொன்னன்னா” என்றால்
சாமர்த்தியமாய்.
“நீ நடந்துக்குறதை பார்த்தா எனக்கு அப்படி தான் தோணுது”
“குற்றம் செஞ்சவங்களுக்கு அப்படி தான் தோணும்” என்றால்
விட்டேரியாய்.
“நான் எந்த தப்பும் பண்ணலடி”
“சரி”
என்று எளிதாக ஒத்துக்கொண்டவளை எப்படி கையாள்வது என்று
புரியாமல் தவித்தான்.
“சரின்னா என்ன அர்த்தம் மஹி”
“சரின்னா நீங்க தப்பு பண்ணலைன்னு நான் நம்பிட்டேன்னு
அர்த்தம்” என்று விட்டு படுக்கையில் படுத்துக்கொண்டாள். அவள்
சொன்ன தோனியே அவள் நம்பவில்லை என்று புரிய கடுப்பாய் வந்தது ரிஷிக்கு.
“நீ நடந்துக்குறத்தை பார்த்தா அப்படி தெரியல”
“தூக்கம் வருது ரிஷி”
“மஹி நான் கேட்டதுக்கு பதிலை சொல்லிட்டு தூங்கு” என்றான்
எரிச்சலாக
“பதில் உங்களுக்கே தெரியும் எதுக்கு என்னை கேக்குறீங்க”
“மஹி”
அவள் அவனை கண்டுக்கொள்ளாமல்
“படுங்க காலையில சீக்கிரமா எழுந்திரிக்கனும்” என்றவள்
கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டாள்..
“எழுந்திரி மஹி” அவளிடம்
எந்த அசைவும் இல்லை.
“லாஸ்ட் வார்னிங் மஹி” அவள்
எழவேயில்லை.
அவளை உருத்து பார்த்தவன்
கட்டுக்கடங்காத கோவத்தோடு பாத்ரூம் கதவை உடைத்து தள்ளியவன் குளித்துவிட்டு ஈர உடம்போடு
அப்படியே வந்து படுத்தான்.
அவனது அரவம் கேட்டு
விடி விளக்கு வெளிச்சத்தில் கண்களை திறந்து பார்த்தவள் துடைக்காமல் முத்து முத்தாய்
அவனது உடம்பில் இருந்த ஈரத்தை கண்டு
“என் மேல உள்ள கோவத்தை எதுக்கு உங்க மேல காட்டிக்கனும்” என்று
முணங்கியபடி அவனை நெருங்கி வந்து தன் முந்தானையால் அவனது ஈரத்தை துடைத்துவிட்டாள்.
பட்டென்று அவளது
கையை தட்டிவிட்டான் ரிஷி....
pls give regular update
ReplyDelete