அத்தியாயம் 10

அத்தியாயம் 10

 

அறையின் உள்ளே வந்தும் வராததுமாய்நீ ஏன் ரிஷி இப்படி எல்லாருடைய கண்ணுக்கும் அழகா தெரியுற... இனி போடுற மேக்கப்பை கொஞ்சம் குறைச்சுக்கோ... உன்னை பத்தி என்கிட்டவே சொல்லி என்னை ரொம்ப பேஜார் ஆக்குறாங்கஎன்று சிணுங்கியவளை பார்த்து பளிரேனே சிரித்தான்.

என்ன சிரிப்பு இல்ல என்ன சிரிப்புன்னு கேக்குறேன்.. கொஞ்சமா தொப்பை வைத்து முன் வழுக்கை விழுந்து இருக்க கூடாதா ரிஷி... இப்படியா கண்ணை பறிக்கிற மாதிரி அழகா இருப்பீங்க.. நீங்க நல்லாவே இல்ல ரிஷி.. ஐ ஹேட் யூஎன்று மேலும் அவனை படுத்த அவன் அவளை ரசனையுடன் பார்த்தான்.

என்ன லுக்கு... நான் உங்களை வெருக்குறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீங்க ஜம்பமா பார்வை இட்டுக்கிட்டு இருக்கீங்க..” பொறிந்தவளை கண்டு

ம்ஹும்..” என்றவன்என் சாம்ராஜ்யத்தை நான் பார்வை இடுறேன் தவறா..” என்றபடி அவளை நெருங்கி வந்தான்.

என்னது உங்க சாம்ராஜயமா ஏன் சொல்ல மாட்டிங்க...” என்று பேசும் முன்பே அவளது இதழ்கள் அவன் வசம் இருந்தது..

அவளது இப்படிபட்ட உரிமை பேச்சில் கிளர்ந்தவன் அவளை இறுக்கி அனைத்து முத்தம் கொடுத்தான்.

அவனிடமிருந்து போராடி வெளியே வந்தவள் அவனை முறைத்து பார்த்துஐ ஹேட் யூஎன்றாள்.

ம்ம்ம் பரவால என் கைக்குள்ள இருந்துக்கிட்டே என்னை வெருத்துக்கோஎன்றவன் அவளை மீண்டும் வளைக்க அவனது பிடியிலிருந்து நழுவிய படிஎன்ன சாருக்கு ரொம்ப தான் ரொமான்ஸ் வருது...” என்று கேள்வியாக அவனை பார்க்க

காதலி இப்படி ஹாட்டா இருந்தா எந்த காதலனுக்கும் சும்மா ஜில்லுன்னு தான் இருக்கும் யூ நோ..” என்று அவன் இரு அர்த்தத்தில் பேச அவளுக்கு அடிவயிற்றில் சுரம் பிடித்தது..

ரிஷி..”

தெரியும் இது ஆபிஸ் அதானே..”

ம்ம்என்றாள் தலை நிமிராமல்.

அப்போ வீட்டுல வச்சு இதெல்லாம் பேசுனா மேடம் அப்படியே வளைந்து கொடுத்துவிடுவீங்க இல்லையா..” என்று நக்கலாய் கேட்க

அவள் பதில் பேசாமல் மௌனமாய் இருந்தாள். “பேசவும் கூடாதா..” என்றான் ஆற்றாமையாய்..

குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.. “என்ன பதிலையே காணோம்..” என்று மேலும் கேட்க

இப்போ என்ன வேணும்என்றாள் அவனது வருத்தம் பிடிக்காமல்

ம்ம்ம் நீயா குடுக்க வந்த முத்தம் பெண்டிங்ல இருக்கு கிளியர் பண்ணி விடுஎன்றான் அசால்ட்டாய்..

அதை கேட்டவள்ஹாங்என்று திகைக்க ரிஷி கண்களை மூடி அவளுக்காக காத்திருந்தான்.

அவனை ஏமாற்றவும் மனம் இல்லை.. தானாகவும் செல்ல மனம் இல்லை.. என்ன செய்வது என்று திகைத்தவள்

அவனை நெருங்கி அவனது முகத்தை பற்றியவள் அவனது உயரத்துக்கு எம்பி சொரசொரப்புடன் தாடி மிகுந்து இருக்கும் அவனது கன்னத்தில் அழுத்தமாக முத்திரை பதித்தவள் அவனை திரும்ப விடாமல் அவனது காதில் சில வார்த்தைகளை உச்சரித்தாள்.

எனக்கு தெரியும் இது எவ்வளவு ஏமாற்றமாய் இருக்கும் என்பது.. ஆனா என் முதல் முத்தம் நானா மனம் விரும்பி கொடுக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு... வலுகட்டாயத்துல கொடுத்தா அது நல்லா இருக்காது ரிஷி.. கடமையேன்னு இருக்கும்.. உங்களுக்கு அது வேணாம்.. என் முத்தம் என் உயிர் சிலிர்த்து உள்ளம் உருகி உணர்வு பூர்வமா நான் உணர்ந்து உங்களுக்கு கொடுக்கணும்... அதை வாங்கிக்கொள்வது உங்க சாமார்த்தியம்என்று அதுவரை காதலுடன் பேசியவள் கடைசி வரியில் அவனை சீண்டி விட்டுவிட்டு ஓட பார்க்க அவளை எட்டி பிடித்தவன்

நீ சொன்ன மாதிரியே உன் கிட்ட முத்தம் வாங்கி காமிக்கிறேண்டி.. அப்போ தெரியும் இந்த ரிஷி யாருன்னுஎன்று மீசையை முருக்க

முதல்ல என் கிட்ட முத்தம் வாங்குங்க பிறகு மீசையை முருக்கிக்கொள்ளலாம்என்று பலிப்பு காட்டியவள் தன் வேலையை செய்ய ஓடினாள்.

அன்று வேலை முடிய இருவரும் வீட்டுக்கு வரநான் டீ போடுறேன் கைட் பண்ணுங்கஎன்று வேலையில் இறங்க அவன் சொன்ன படி செய்தாள்.

போட்டு முடித்தவள் தானே முதலில் சுவை பார்த்தாள்.

சோ சூப்பர் ரிஷி.. நீங்களும் தான் டீ போட்டீங்களே... நல்லாவா இருந்தது இதை குடுச்சி பாருங்கபீத்திக்கொள்ள

முறைத்து பார்த்தவன்கொழுப்புடி உனக்குஎன்றான்.

நான் போட்ட டீல்ல அதனால கண்டிப்பா இருக்கும்கண்கள் சுருங்க சிரித்தவளை கண்டு மனம் நிறைய ரசித்து பார்த்தான் ரிஷி.

அந்த சமயம் காலிங் பெல் சத்தம் கேட்கயாரு ரிஷிஎன்றாள்.

போய் பார்த்தாதாண்டி தெரியும்..”

அப்போ போய் பார்க்க வேண்டியது தானே எதுக்கு வீண் அரட்டைஎன்று வம்பிழுத்தவளின் தலையில் செல்லமாய் தட்டி விட்டு

வாய்டி உனக்கு.. இரு வந்து உன்னை வச்கிக்கிறேன்கதவை திறந்து பார்த்தான்.

எதிரில் கீழ் தளத்தில் வசிக்கும் ஆண்டியும் அங்கிளும் நின்றிருக்க

வாங்க ஆண்டி அங்கிள்வரவேற்று உள்ளே அமரவைத்தான். சத்தம் கேட்டு மகியும் வெளியே வந்து புன்முகம் காட்டி வரவேற்று பருக தண்ணீர் கொடுத்து உபசரித்தாள்.

இப்போ தான் வேலையில் இருந்து வந்து இருப்பீங்க.. நாங்க வந்து தொந்தரவு பண்றமாஎன்று சங்கடமாய் கேட்டவரை கண்டு

அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆண்டி.. நீங்க எங்களை தேடி வந்தது எங்களுக்கு சந்தோஷம் தான்..” என்று அவரது கைப்பற்றி சொன்னவளை வாஞ்சையுடன் பார்த்தவர்

உன் பிரண்ட்ஸ்க்கு அதாவது என் மாமியார் மாமனாருக்கு என்பதாவது கல்யாணம் பண்றதா இருக்கோம்டா. வர்ற வெள்ளிக்கிழமை காலை முகுர்த்தம் ரெண்டு பேரும் அவசியம் வரணும். உன் பாட்டி உன்னை தனியா ஸ்பெசலா அழைக்க சொல்லி இருக்காங்கஎன்று சிரித்தவர் ரிஷியின் புறம் திரும்பிஉங்களை நான் அவ்வளவா பார்த்தது இல்லை. நீங்க வேலை விட்டு தாமதமா வர்றதா சொல்லி இருக்கா மஹி.. மாலை நேரம் பக்கத்துல இருக்குற சிவன் கோவில்ல சடங்கு வச்சு இருக்கோம் சிரமம் பார்க்காம மஹியை அழைத்துக்கொண்டு வாங்க.. மஹின்னா என் மாமியாருக்கு ரொம்ப பிரியம். மாலை நேரம் முழுவதும் ரெண்டு பேரும் கீழ இருக்க பார்க்குல உட்கார்ந்து மணி கணக்கா பேசிக்கிட்டு இருப்பாங்கஎன்றார்.

அதுக்கென்னங்க ஆண்டி நான் கூட்டிட்டு வரேன்உறுதியளித்தான் ரிஷி.

இந்தா மஹிஎன்று குங்குமத்தை நீட்ட அவள் வாங்கி நெற்றியில் வைத்துக்கொண்டாள்.

வகிட்டிலும் வச்சுக்கோமாஎன்க

புரியில ஆண்டிஎன்றாள்.

கல்யாணம் ஆனா பொண்ணுங்க உச்சிளையும் வைக்கணும் வைமாஎன்றார் மிக தெளிவாக

அதில் அவள் திரும்பி அவனை பார்க்க

ரிஷியோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்எப்பவும் நான் தான் வச்சுவிடுவேன் ஆண்டி அதான் அவ முழிக்கிறாஎன்றவன் வெகு சுவாதினமாக மோதிர விரலில் குங்குமத்தை எடுத்து அவளது கண்களை பார்த்துக்கொண்டே அவளது உச்சியில் வைத்துவிட்டான்.

அதில் மஹியின் உடல் சிலிர்த்து அடங்கியது. “சரிப்பா நாங்க வரோம்என்று அவர்கள் கிளம்பி விட

அவள்ரிஷிஎன்று அழைத்தாள்.

நீ என்னோட மனைவி அதை நான் இன்னைக்கு உனக்கும் இவங்களுக்கும் உணர்த்தி இருக்கிறேன் அவ்வளவு தான். இதுக்கு எதுக்கு இவ்வளவு ஷாக்.. வா வேலை இருக்குஎன்று அவளை சமையல் அறைக்கு அழைத்து சென்றான்.

எப்பொழுதும் போல அவளை சமைக்க பழக்கினான். அவன் சொல்லி தந்த விசயங்களை கவனத்துடன் கேட்டுக்கொண்டு அதுபோலவே செய்தாள். சொல்லித்தரும் போது அவனுடைய கவனம் எங்கும் சிதறாமல் இருக்க, மஹி தான் அடிக்கடி அவனது அருகாமையில் நெகிழ்ந்தாள். அதை உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல் சொல்லி தந்தான்.

ஆனாலும் ஒரு பொழுதில் அவனாலும் அவனை கட்டுப்படுத்த முடியாமல் வெகுவாக திணறி போனான்.

இரவு உணவாக சப்பாத்தி தயார் செய்ய அதுக்கு தோதாய் குருமாவும் தயிர் வெங்காயமும் செய்யலாம் என்று முடிவு செய்து சப்பாத்தி எவ்வாறு தேய்ப்பது என்று ரிஷி அவளின் பின் புறம் நின்று சொல்லி தர முதலில் கவனமாய் வட்டமாக தேய்த்து போட்டவள் பின் அவனின் ஆண் வாசத்திலும் நெருக்கத்திலும் தொடாமல் தொட்டுவிட்டு நகரும் விரல்களும் சுதந்திரமாய் அவள் கழுத்தில் உரசும் அவனது மூச்சு காற்றும் அவளை பாடாய் படுத்த லேசாய் நெளிய ஆரம்பித்தாள்.

தொட்டு வரும் உணர்வை விட இப்படி தேகம் தொடாமல் தள்ளி நின்று காட்டும் நெருக்கம் அவளை அவனிடம் சரணடைய வைக்க அதை உணர்ந்தாலும் உணராதவனை போல நின்றவனை கண்டு அவளுள் பெரும் மரியாதை எழுந்தது.

இப்போது இருக்கும் சூழலில் அவன் முத்தமிட்டால் அதை தடுக்கும் வல்லமை தனக்கு இல்லை என்று அவன் உணர்ந்து இருந்தாலும் அதை செய்யாமல் கண்ணியம் காக்கும் ஆணவனின் சுய கட்டுப்பாட்டை அவளுக்கு மிக பிடித்து போனது.

வேலையில் கவன சிதறலில் இடையில் இருந்த புடவை விலகி அவளது இடை வெளியில் தெரிய அதை தொட தன் கைகள் பரபரத்தாலும் மாவை அழுத்தி உருட்டி பிசைந்துக்கொண்டு தன் தாப உணர்வில் அவளை மிரள விடாமல் காத்து நின்றான்.

ஆனாலும் அவனை இன்னும் சோதனை செய்வது போல அவனது பிடிக்குள்ளே நின்று தாளிப்பதற்காக எட்டி எண்ணை புட்டியை எடுத்தவளின் இடை தரிசனம் அவனை பித்தம் கொள்ள வைத்தது.

ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் திரட்டி தனி தனியாய் சிறிய உருண்டையாய் இருந்த மொத்த மாவையும் ஒன்றாக்கி மீண்டும் பெரிய உருண்டையாக திரட்டினான்.

தன் கவனத்தை அவன் அதில் வைக்க அருகில் இருந்தவனின் எண்ணப்போக்கு புரிய சட்டென்று அவனது கை வளைவுக்குள்ளே திரும்பி அவனை பார்த்தாள்.

அவள் பார்ப்பதை உணர்ந்தாலும் அவன் மாவு பிசைவதிலே கவனம் வைக்க அவனை பார்க்கையில் அவன் அவனுள்ளே போராடுவது நன்கு தெரிந்தது.

தான் நெருங்காமல் அவனாய் தன்னை நெருங்க மாட்டான் என்று புரிய தவித்து போனாள். தன்னாலும் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை. அவனாவது வருவான் என்று எண்ணினால் அவன் அதற்க்கு மேல் இருக்கிறான்.

அவன் அருகில் வந்தால் தான் மறுக்க போவது இல்லை.. பின் ஏன் இந்த கட்டுப்பாடு.. விழிகள் சிவந்து உணர்வு மிகுதியில் அவனை பார்க்க அவனும் அவளது தவிப்பு புரிய நிமிர்ந்து அவளை பார்த்தான் சிவந்த விழிகளோடு.

இரு பார்வையும் ஒன்றோடு ஒன்று கவ்வி நிற்க விலக தோன்றாமல் மேலும் நெருங்க தோன்றாமல் அப்படியே நின்று இருந்தார்கள்.

அவளது பார்வையில் இருந்த சம்மதத்தை கண்டும் நெருங்காதவனை கண்டு

உன் கை கோர்க்கும் வேளையில் பாதை இன்னும் நீள வேண்டும்...

உயிர் வாழும் வரை என்னில் உன்னை சுமக்க வேண்டும்...

நானே நீயாக நீயே நானாக வாழும் வரம் வேண்டும்...

உன்னோடு நானாகி விழி திரையில் உன் பிம்பம் வேண்டும்...

மனம் தன்னில் நீயே நிறைந்து, என் உணர்வுகளில் உறைந்திட வேண்டும்...

மூச்சு காற்றில் கலந்து உன்னோடு பெருவாழ்வு வாழ வேண்டும்...” என்று விசும்பிய படி சொன்னவளை இழுத்து அணைத்துக்கொண்டு தன் உயிரில் முடிந்துக்கொண்டான்.

மஹிகாதலாய் அவன் அழைக்க

அவளிடம் வார்த்தைகளே இல்லை.. பேச தோன்றா நிமிடங்கள். இந்த நொடி போதும் என்கிற நிலை...

பாதியில் நின்ற சமையல் மறந்து போனது இருவருக்கும். அடுத்த நொடியை பற்றிய சிந்தனை இல்லை. உணர்வுகளில் உறைந்து போய் இருந்தார்கள்.

அந்த உணர்வுகளுக்கு உரம் சேர்ப்பது போல இரவு நேர ஊத காற்று வீச மஹிக்கு தூக்கம் வந்தது.

அவனது நிலை தாண்டா காதலிலும் சுகத்திலும் அவன் தரும் பாதுகாப்பிலும் ஆழ் உறக்கத்துக்கு சென்றாள்.

மயங்கிய நிலையிலிருந்து வெளிவந்த ரிஷி அவளை கூடத்தில் படுக்கை விரித்து அவளை படுக்க வைத்தவன் விலக நினைத்தான் ஆனால் அவனால் முடியவில்லை..

அவளின் கூந்தலுக்கு நோகுமோ என்று அஞ்சி மிக மிருதுவாக அவளின் தலையை வருடி கொடுத்தான். அவன் கொடுத்த தாய்மையின் அரவணைப்பில் கனவில் எழுந்த துயரம் கூட நின்று அவளை வருத்தாமல் ஓடிப்போய் ஒழிந்தது. அவளது வதனத்தில் பூத்த பூவை சேகரித்துக்கொண்டு பாதியில் நின்ற சமையலை முடித்து குளித்து அவள் அருகில் அவளை கலைக்கா வண்ணம் வந்து படுத்துக்கொண்டான் ரிஷி.

 

 

Comments

உயிருருக உன் வசமானேன்..